இதில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். 2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் ரிலீஸ் செய்ய திட்டம்மிட்டிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனால் படபிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மும்பை மழையில் கூட ஷூட்டிங் நிற்காமல் நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.
சென்னைக்கு வந்த அடுத்த நாளே இயக்குனர் சிவாவை தன்னுடைய போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். பிறந்தநாளுக்கு முன்பே படத்தின் இந்த படத்தை தொடங்கிவிடலாம் என்று திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
ரஜினியின் எந்திரன், பேட்ட போன்ற படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்தையும் தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.