கபிலன் வைரமுத்து விருது பெற்றபோது
""பொது வாழ்க்கையில் ஈடுபடுகிறவர்களைப் பரிதாபமாகப் பார்க்கக்கூடிய நம் சமூகத்தில் அந்த மூடப் பார்வையை மோதி மிதித்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளாக சேவை செய்து கொண்டிருக்கிறது பாலம் அமைப்பு.
இந்த அச்சத்தின் அடிப்படையில் உருவான பாடல்தான் "ஏந்திரு அஞ்சலி ஏந்திரு.' மதுவுக்கு எதிரான பாடல் அரசுக்கு எதிரான பாடலாகப் பார்க்கப்பட்டதால் இந்தப் பாடலைப் உருவாக்கி வெளியிடுவதில் நிறைய சிரமங்கள் இருந்தன. இந்தப் பயணத்தில் நிறைய படிப்பினைகள். மதுக்கடைகளை மூடச்சொல்லி பேசினால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என யாரோ தந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் வரவிருக்கிற பொதுத்தேர் தலின் பிரச்சார மேடைகளில் மதுவுக்குஎதிராகப் பேசக்கூடாது என சில அரசியல் கட்சிகள் முடிவெடுத்திருப்பதாகக் கேள்விப் படுகிறோம்'' என்ற பரபரப்பைப் பற்ற வைத்தார்.
'பாலம்' அமைப்பின் நிறுவனர் இருளப்பன் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் மாரிமுத்து விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.