Skip to main content

நீ காணவேண்டியது அரசரை அல்ல, கவிப்பேரரசரை - கபிலன் வைரமுத்து

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

சமிபத்தில் நடைபெற்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் தமிழாற்றுபடை அரங்கேற்ற விழாவில் ஒரு குட்டிகதை சொல்லி, ஒளவையார் தமிழாற்றுபடை கட்டுரையை அறிமுகம் செய்தார் வைரமுத்துவின் மகன் கவிஞர்.கபிலன் வைரமுத்து. அரங்கில் இருந்த பலரின் கைதட்டலை பெற்ற அந்த குட்டிகதை பின்வருமாறு...

 

kabilan story

 

இந்த கதையில் வருவதெல்லாம் கற்பனையே, இதில் பறவைகள், விலங்குகள், மனிதர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை.

 

ஒரு அதிகாலை நட்சத்திரத்தை விட்டு வெளியேறி, கையில் கைத்தடியோடு,
வள்ளுவர்கோட்டத்தில் வந்து விழுகிறார் ஔவை. கே.பி.சுந்தராம்பாளைவிட சுமாரான தோற்றம்தான்.

 

முந்தைய இரவு நடந்த போராட்டத்தில், தான் உயர்த்தி பிடித்த கருப்புக்கொடியை
தலைக்கு வைத்து உறங்கி கிடந்தான் இளைஞன் ஒருவன்.

 

"அப்பனே" என்று அழைப்பு குரல் கேட்டது. கண்களை திறந்து கிழவியை கண்டவன்
"சில்லறை இல்ல" என்று திரும்பி கொண்டான்.

 

"அப்பனே, மரிக்காத புலமை எனக்கு, உன் மதிப்பிழக்கும் சில்லறை எதற்கு, ஔவை நான்.
நான் பாடிய தமிழுலகை மறுபடி காண வந்தேன். உன் வாகனத்தில் எனக்கொரு உலா கிடைக்குமா?"
மன்னிப்புகலந்த வணக்கம் சொல்லியவன், ஔவையை தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டான்.

 

"எவ்விடம் செல்கிறாய் அப்பனே?"
"பாட்டி, சுட்ட இடம் போகவா, சுடாத இடம் போகவா?"
"அது என்ன குமரா?"
"சுட்டு களைக்கப்பட்டது தூத்துக்குடி, சூழ்ச்சியால் களைக்கப்பட்டது மெரினா. இவை தமிழர் வீரத்தின் நவீன நினைவகங்கள். எங்கே போகலாம்?"

 

"வீரத்தை பொறுமையாக பார்க்கிறேன். வயிறு பசிக்கிறது, உணவளி அப்பனே"
"என்ன உணவு வேண்டும் பாட்டி?"
"பூக்களை வேகவைத்தது போல் ஒரு பதார்த்தம் உண்டாமே, இட்லி என்று சொன்னார்கள்".
இளைஞன் யோசித்தான், தெருவுக்கு தெரு இட்லி கடைகள் இருந்தாலும் முருகன் இட்லி கடையில் ஔவைக்கு விருந்து வைத்தான்.

 

ஊரெல்லாம் சுற்றிய ஔவை கடற்கரை சாலையில் தன் சிலைக்கு கீழே ஓய்வெடுத்தார்.
"நல்லது அப்பனே, தமிழின் எதிர்காலம் குறித்து பேசவேண்டும், உன் அரசரிடம் என்னை அழைத்து செல்."
"அவசியம் இல்லை ஔவையே. கோடை காலத்தில் தேர்தல் வருகிறது, அரசர்களே வீடு வீடாக வந்து மக்களை சந்திப்பார்கள். தமிழின் எதிர்காலம் குறித்து பேச நீ காணவேண்டியது அரசரை அல்ல, கவிப்பேரரசரை. என்னோடு வா."

 

அன்னிபெசன்ட் நகருக்கு ஔவை வருகிறார். கவிஞரின் இல்லத்தில் அடியெடுத்துவைக்கிறார்.
இருசக்கர இளைஞன் விடைபெறுகிறான். தன் வீட்டு புல்வெளியில், ஒரு கையில் தேனிரோடும் மறுகையில் பேனாவோடும் கவிஞர் காட்சியளிக்கிறார். ஔவை தன்னை அறிமுகம் செய்கிறார். கவிஞர் எழுகிறார்.

 

காலில் விழுந்து பழகாத கவிஞர், கண்களில் நீர்கட்ட ஔவையின் கைதொட்டு வணங்குகிறார்.
"ஔவையே..! தாய்நாடு திரும்பிய தாயே..! தமிநாட்டின் வணக்கம் உனக்கு."
"கவிஞனே, தமிழ்நாடெல்லாம் வேண்டாம், உன் தமிழாற்றுப்படையில் இடம் கிடைக்குமா"
கவிஞர் சிரிக்கிறார். "நூற்றாண்டுகள் கடந்து வந்த பெண்பாற் புலவரே, பாட்டியின் புகழ் பாடாத பேரன்கள் உண்டா? உன் வாழ்வும் தமிழால் ஆனது என் வாழ்வும் தமிழால் ஆனது. உன்னுடைய அதியமானும் மாய்ந்துவிட்டார், என்னுடைய அதியமானும் மாய்ந்துவிட்டார். இனி நமக்கு நாம்தானே ஆதரவு."
கவிஞர் ஔவையோடு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார். மாண்டுபோன புலமைகள், தமிழ் தாண்டவேண்டிய தடைகள் என நீண்டநேரம் உரையாடுகிறார்கள்.

 

கவிஞர் தந்த நெல்லிக்கனி தேனீரை மெல்ல பருகிய ஔவை, கைத்தடிபற்றி எழுகிறார்.
"கவிஞனே, உன் தமிழாற்றுப்படை சபையில் ஏதோ ஒரு வரிசையில் நானும் அமர்திருப்பேன். தாயிருக்கும்வரை கலக்கமில்லை, எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை" என ஆசிகூறி மறைந்தார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.