குமரன் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளரான ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ளது 'பறை' தனி இசைப்பாடல். பறை இசைக்கலைஞரின் சடலத்தை ஊருக்குள் எடுத்துவர நிலவும் எதிர்ப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கான வரிகளை கே.லோகன் மற்றும் ஷான் ரோல்டன் எழுதியுள்ளனர். இப்பாடலை இயக்கியுள்ள குமரன், கதிர் நடிப்பில் வெளியான ஜாடா படத்தை இயக்கியவர் ஆவார். நேற்று நடைபெற்ற இப்பாடல் வெளியீட்டு விழாவில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இயக்குநர் குமரன், தா.செ.ஞானவேல், நடிகர் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனம்பெற்ற இப்பாடல் யூடியூப் தளத்தில் ஒரே நாளில் மூன்று லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் இப்பாடல் குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.