ADVERTISEMENT

சிம்புவை வைத்து எடுத்த படம் என்னை நிலைகுலைய வைத்து விட்டது - பாண்டிராஜ் 

04:24 PM Jul 20, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான நேர்காணலின் போது இயக்குனர் பாண்டிராஜிடம் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புக்கு ஒழுங்காக செல்வது குறித்து கேட்டபோது.... " 'இது நம்ம ஆளு' படம் என்னை நிலைகுலைய வைத்து விட்டது. தியேட்டரில் படத்தை பார்த்து சிரித்தார்கள், ரசித்தார்கள் என்றாலும் ஒரு இயக்குனராக நான் நினைத்தது வர வில்லை. நினைத்த இசையை கொண்டுவர முடியவில்லை. ஒரு இயக்குனராக மிகுந்த வருத்தமும், ஏமாற்றமும் அடைந்தேன். சிம்பு மணிரத்னத்தின் மேல் உள்ள பயத்தில் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக சென்றிருப்பார். இருந்தும் என் படத்தின்போதும் அவர் பெரும்பாலும் குறித்த நேரத்திலேயே வந்து விடுவார். அதில் 3 அல்லது 4 நாட்கள் மட்டும் லேட்டாக வந்திருப்பார். மேலும் சிம்புவுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லவும் இல்லை. படம் தாமதமானத்திற்கு காரணம் படத்தின் இசையமைப்பாளராலும், தயாரிப்பு தரப்பினாலும் மட்டுமே தவிர சிம்பு காரணமில்லை. நானும் சிம்புவும் சேர்ந்து மீண்டும் இன்னொரு படம் கண்டிப்பாக பண்ணுவோம்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT