ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா. இரஞ்சித், கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து 'சார்ட்டா பரம்பரை' படத்தை இயக்கியிருந்தார். நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், பெரும் வெற்றிபெற்று விமர்சன ரீதியாக பலரது பாராட்டுகளைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் நடிக்கும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கிவருகிறார். முழுக்க முழுக்க காதல் பிண்ணனி வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் பா. இரஞ்சித் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்தவுடன் நடிகர் விக்ரம் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் பா. இரஞ்சித்.
ADVERTISEMENT
Show comments