ADVERTISEMENT

"என்னை மகன்போல பார்த்துக்கொண்டார்" - பிரபல நடிகர் குறித்து நடிகர் முகேன் நெகிழ்ச்சி!

11:22 AM Dec 23, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ், மீனாக்‌ஷி கோவிந்தன், சூரி, பிரபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலன்’ திரைப்படம், டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (22.12.2021) நடைபெற்றது.

விழாவில் நடிகர் முகேன் ராவ் பேசுகையில், "இவ்வளவு பெரிய மேடையை என் வாழக்கையில் முதன்முறையாகப் பார்க்கிறேன். கவின் அண்ணா, கலைமகன் முபாரக் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி. ஒரு கலைஞன், தனக்கு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருப்பான். அப்படி நான் ஏங்கும்போது எனக்கு இந்த வாய்ப்பை இவர்கள் தந்தார்கள். கவின் அண்ணா என்னிடம் கதை சொன்னபோதே மிகவும் ரசித்தேன். அவர் சொன்ன மாதிரியே சூப்பராக எடுத்திருக்கிறார். முபாரக் சார் என்னை மட்டுமல்ல, இன்னும் நிறைய திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நன்றி. பிரபு சார் மிகப்பெரிய லெஜண்ட். ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து என்னை ஒரு மகனைப் போல பார்த்துக்கொண்டார். சூரி அண்ணாவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவர் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்குச் செல்ல வேண்டும். ராகுல் நிறைய கஷ்டங்களைத் தாண்டி வந்துள்ளார். அவர் ஜெயிக்க வேண்டும். இந்தப் படத்தை ஒரு குடும்பமாக இணைந்து எடுத்துள்ளோம். மீனாக்‌ஷி மிகவும் அர்ப்பணிப்புடன் நடிக்கக் கூடியவர். இந்தப் படத்தில் சூப்பராக நடித்திருக்கிறார். பிரிகிடாவும் சூப்பராக நடித்திருக்கிறார். இந்த வரவேற்புக்கு உங்களுக்கு நன்றி. உங்கள் அன்புதான் என்னை இங்கு அழைத்து வந்துள்ளது. ‘வேலன்’ படம் எனக்கு மிகவும் முக்கியமான படம். இப்படம் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இருக்கும்" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT