ADVERTISEMENT

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மகேஷ்பாபு!

07:09 PM Aug 07, 2020 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

டோலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தன் பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில் இப்போதே அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபு தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்...

"எனது அன்பான ரசிகர்களுக்கு ஒரு அன்பான கோரிக்கை,

உங்கள் அனைவரையும் நான் பெற்றதற்கு ஆசீர்வதிக்கப்பட்டவனாய் நன்றி கூறுகிறேன். எனது விஷேசமான நாளை மறக்க முடியாத நாளாக ஆக்க நீங்கள் செய்யும் அனைத்து நல்ல செயல்களையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். இந்த ஆண்டு உலகளாவிய தொற்றுநோயை நாம் எதிர்த்துப் போராடுவதால், பாதுகாப்பு இன்றியமையாதது. எனது பிறந்த நாளில் எந்தச் சமூகக் கூட்டங்களையும் தவிர்க்குமாறு எனது நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT