ADVERTISEMENT

‘மாநாடு’ படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!

10:57 AM Jul 10, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்துவரும் இப்படத்திற்கு, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன.

பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, சென்னை, புதுச்சேரி, பொள்ளாச்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திவந்தது. கரோனா பரவல் காரணமாக கடுமையான நெருக்கடிகள் நிலவிய போதிலும் தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்த நிலையில், ‘மாநாடு’ படத்திற்கான படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்துள்ளது. இத்தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகளைக் கரோனா ஊரடங்கு காலத்திலேயே படக்குழு தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அப்பணிகளை விரைந்து முடித்து, படத்தை விரைவில் திரைக்குக் கொண்டுவரும் திட்டத்தில் படக்குழு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT