ADVERTISEMENT

கடலென திரண்ட ரசிகர்கள்; கையசைத்து முத்தமிட்ட அஜித்!

06:59 PM Jul 27, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்று வருகிறார்கள். இவர்களுடன் நடிகர் அஜித்தும் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதில் 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்டுள்ளார்.

இதனிடையே அங்கு நடிகர் அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்களை பார்க்க ரைபிள் கிளப் மடியில் ஏறிய அஜித் அவர்களுக்கு கையசைத்து முத்தமிட்டார். மேலும் அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த போலீசார் இறுதியில் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT