Skip to main content

இரும்பு கொல்லராகப் பணிபுரிந்த கே.ஜி.எஃப் இசையமைப்பாளர்!

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
 

ravi


உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,85,807 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,820 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,,65,659 பேர் குணமடைந்துள்ளனர்
 

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

 


இதனால் கே.ஜி.எஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ருர் தனது தந்தையின் கொல்லுப்ப்பட்டறையில் கொல்லராகப் பணிபுரிந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், பழைய நியாபகங்களைத் திரும்பி பார்க்கக் கடவுள் உதவியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்