இந்நிலையில், பிரதமருக்கு உ.பி. மாணவர் எழுதிய கடிதத்துக்கு இயக்குனர் கே.பாக்யராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது... ''இந்த மாணவரின் ஐடியாவை செயல்படுத்துங்கள் என பிரதமர் மோடிக்கு தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் இருந்து நான் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளேன். நீங்களும் இதேபோல் இந்த விஷயத்தை பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும். மனிதனுக்கு ஏற்றமோ, தாழ்வோ வரும்போது இதுவும் கடந்து போகும் என்பது ஞாபகத்திற்கு வரவேண்டும். இந்த இக்கட்டான கரோனா பிரச்சனையும் அதுபோல் கடந்து போகும். அனைவரும் தனித்திருக்க வேண்டும். அரசு கூறிய ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். உதவி செய்வதிலேயே பெரிய உதவி பிரதிபலன் பாராது செய்யும் உதவிதான் என்பது போல் நமக்காக காவல்துறையினர், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ அதிகாரிகள் உள்பட பலர் சேவை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்'' என்று கூறியுள்ளார்.