Skip to main content

எந்த திருட்டாக இருந்தாலும் தப்புதான் - இயக்குநர் கே.பாக்கியராஜ் exclusive interview

Published on 28/10/2018 | Edited on 29/10/2018
k bhagyaraj exclusive interview



தமிழ் சினிமாவில் கதை திருட்டு என்பது புதிது கிடையாது. பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்கள் படங்கள் வரும்போது பூதாகரமாக இது எழும். அதுபோன்ற பிரச்சனையில் தற்போது சிக்கியுள்ள படம் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார். 
 

இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், நக்கீரன் ஸ்டூடியோ இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.
 

சர்கார் பட பிரச்சனை எங்கு துவங்கியது?
 

வருண் என்கிற ராஜேந்திரனை எனக்கு இதுவரை தெரியாது. புகார் கடிதம் ஒன்றை அவர் எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தபோதுதான் அவரை தெரியும். 
 

இன்னொன்று எனக்கும் சன் குழுமத்திற்கோ, எனக்கும் விஜய்க்கோ, எனக்கும் முருகதாஸ் அவர்களுக்கோ உள்ள பிரச்சனை கிடையாது. 
 

எங்கள் சங்கத்தில் உள்ள எழுத்தாளருக்கும், அதே சங்கத்தில் உள்ள முருகதாஸ் அவர்களுக்கும் உள்ள பிரச்சனை. 


ஒரு எழுத்தாளரிடம் நியாயம் இருக்கிறபோது அவர் சின்ன ஆளா, பெரிய ஆளா என்று பார்க்க முடியாது. யாரை எதிர்த்து பேசப்கோகிறோம், அவர் பெரிய ஆளா, சின்ன ஆளா என்று பார்க்க முடியாது. 
 

10 வருடத்திற்கு முன்னரே எழுதி பதிவு செய்து வைத்திருந்த கதைதான் சர்கார் என்று வருண் என்பவர் புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரை உடனே நான் ஏற்கவில்லை. ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டேன். 
 

சர்கார் படக்குழு நிகழ்ச்சியில் ஒரு கதையை சொல்லியிருக்கிறார்கள். அது அடங்கிய ஒரு சிறிய பேப்பர் கட்டிங் கொடுத்தார். அதை காண்பிக்கும்போது இரண்டு கதைகளின் சாரம்சமும் ஒன்றாக இருந்தது. 


முருகதாஸிடம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று அவரை அழைத்துப் பேசினோம். காசு, பணத்திற்காக சிலர் இதுபோல தனது கதை என புகார் கொடுக்கிறார்கள் என்றார். 
 

காசுக்காக இல்லை, புகார் கொடுத்த வருணிடம் நன்றாக விசாரித்துவிட்டோம் என்று எவ்வளவோ பேசி பார்த்தேன். ஆனால் முருகதாஸ் கோர்ட்டில் பார்த்துக்கொள்வதாக கூறினார். 
 

பின்னர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து, வருணையும் அழைத்து, 10 வருடத்திற்கு முன்பு கொடுக்கப்பட்ட கதையை எடுத்து வரச்சொல்லி, படித்து பார்த்தோம். அதேபோல் முருகதாஸ் கதையையும் படித்து பார்த்தோம். இரண்டு கதைகளின் சாரம்சமும் ஒன்றாக இருந்தது. 
 

முருகதாஸிடம், இரண்டு கதையும் ஒன்றாக இருப்பதாக சொன்னோம். அதற்கு அவர் கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். 
 

பின்னர் சங்க நிர்வாகிகள், முருகதாஸ் ஒத்துவரவில்லை என்றால் வருண் புகார் தொடர்பாக சங்கத்தின் சார்பாக ஒரு கடிதம் வெளியிட்டு விடலாம். அதில், இரண்டு கதையும் ஒன்றுதான். இதை மீறி நீங்கள் எந்த நடவடிக்கைக்கும் போகலாம் என்று சொல்லிவிடலாம் என்று முடிவு எடுத்து கடிதம் ஒன்றை வெளியிட்டோம். 
 

இதற்கிடையில் விஜய்யிடம் தொடர்பு கொண்டு, இந்த விவகாரம் குறித்து பேசினேன். மிகவும் கஷ்டமாக இருக்கிறது, முருகதாஸிடம் பேசி பார்த்தேன். எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது என்றேன். 
 

அதற்கு விஜய், நீங்க ஏன் சார் தர்ம சங்கடப்படுகிறீர்கள். நீங்க முறைப்படி என்ன செய்யணுமோ அதை செய்யுங்க, அவர்தான் கோர்ட்டுக்கு போகிறேன் என்றால் போய் பார்த்துக்கொள்ளட்டும் என்றார். 
 

எனது மகன் விஜய் ரசிகர். அவன் என் மீது கோபமாக இருக்கிறான். எனது குடும்பத்தினரும் இந்த விசயம் குறித்து பேசினார்கள். வெளியில் சில இடங்களுக்கு போகும்போது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார்கள். எல்லாரையும் திருப்தி படுத்த முடியாது. 
 

சில பொறுப்புக்கு வரும்போது சில கல்லடிகள் விழத்தான் செய்யும். கஷ்டங்கள் வரத்தான் செய்யும், எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான். 
 

விஜய்யிடம் பேசும்போது இந்த விவகாரம் அவருக்கு ஏற்கனவே தெரியும் என்று சொன்னாரா?
 

நான் சொல்லித்தான் இந்த விஷயமே தனக்கு தெரியும் என்றார். முருகதாஸ் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறார் என தெரிவித்தை சொன்னேன்.

அதற்கு விட்டுடுங்க, உங்க புரொஷிஜர் என்னவோ அதை சரியாக பண்ணுங்க அவ்வுளவுதான். அவர் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லும் போது நீங்க ஏன் கவலைப்படுறீங்க என்றார். 

 

k bhagyaraj


நீங்கள் வெளியிட்ட கடிதத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுத்தால் தடுக்க மாட்டோம். முழுமையாக உதவ முடியாததற்கு வருந்துகிறோம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். எந்த பின்புலமும் இல்லாத ஒரு உதவி இயக்குநர் புகார் கொடுத்திருக்கிறார், அந்த புகாரில் உண்மை இருக்கிறது என்று சங்கம் முடிவு எடுத்துள்ளது. சங்கம் உதவ முடியவில்லை என்றால் ஒரு தனி மனிதனாக ஒரு பெரிய இயக்குநர், ஒரு பெரிய பட நிறுவனத்தை, ஒரு பெரிய நடிகரை எதிர்த்து அவரால் என்ன பண்ண முடியும்.
 

உதவி இயக்குநர்களாக இருப்பவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொருவரும் அப்படி கஷ்டப்பட்டு வந்தர்கள்தான்.

முருகதாஸ் அப்படி கஷ்டப்பட்டு வந்தவர்தான். ஒரு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் சங்கத்தில் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். 

அப்படி விதிமுறைகளை மீறினால் மற்ற சங்கங்கள் கண்டிக்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும். அப்போதுதான் கோர்ட்டுக்கு செல்லாமல் பிரச்சனையை முடிக்க முடியும். 
 

தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று சொல்லிவிட்டார்கள். கோர்ட்டில் பிரச்சனை இருக்கிறது. என்ன ஆகும்? 
 

என்ன ஆகுமென்று தெரியாது. நமக்கு தோன்றியபடி நியாயப்படி என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லிவிட்டோம். கடிதமாக கொடுத்துவிட்டோம்.

என்ன நடந்தது என்று கோர்ட் கேட்கும்போது, நடந்ததை கோர்ட்டில் சொல்லுவேன். கோர்ட் என்ன முடிவு எடுக்கும் என்பது எனக்கு தெரியாது. 
 


பொதுவாக சினிமாவில் கதை விவகாரம் தொடர்ந்து இதேபோல் இருந்து வருகிறது. நீங்கள் என்ன அறிவுரை சொல்ல நினைக்கிறீர்கள்?
 

பொதுவாகவே எந்த திருட்டாக இருந்தாலும் தப்புதான். திருட்டு என்பது இருக்கக்கூடாது. இங்க கொஞ்சம், அங்க கொஞ்சம் என எடுக்கும்போது அதற்குள்ள மரியாதை இருக்காது. பணம் சம்பாதிக்கலாம், ஆனால் இந்த துறையில் நல்ல பெயர் எடுக்க முடியாது. எப்போதும் சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.
 

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...

Next Story

“பா.ஜ.கவினருக்கு எதையும் நேரடியாக சொல்லும் பழக்கம் கிடையாது” - மாணிக்கம் தாகூர்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Congress candidate Manikam Tagore says What does Nirmala Sitharaman know in interview for loksabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 10 தொகுதியில் ஒன்றான விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு  மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி பின்வருமாறு...

காங்கிரஸ்காரர்கள் பா.ஜ.கவை பற்றி மக்களிடத்தில் ஒரு பொய்யான பயத்தை உருவாக்குகிறார்கள் என்று பிரதமர் மோடி சொல்கிறாரே?

“திருடப் போகிறவர்களை பிடித்தால் அவர்களிடம் எந்த மாதிரியான பதற்றம் உருவாகுமோ அந்த மாதிரியான பதற்றம் தான் மோடியிடம் இருக்கிறது. குஜராத் மாநிலத்திற்கு சென்றால் அங்கு சிறுபான்மையினர் மக்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 25 வருடமாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு எம்பி கூட அங்கு கிடையாது. அங்கு 9 சதவீத சிறுபான்மையின மக்கள் இருக்கிறார்கள். ஒரு அமைச்சர் கூட இல்லாமல், ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் ஒரு கட்சி நடத்த முடியுமா?.ஆனால் அங்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரையில் இதனைத் தொழிலாக வைத்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் இதை அவர்களுடைய கொள்கையாக வைத்திருக்கிறது. சிறுபான்மை மக்களை ஓரங்கட்டி, அவர்களை நிராயுதபாணியாக ஆக்க வேண்டும், அவர்களை கேவலப்படுத்த வேண்டும், அதை வைத்து அரசியல் செய்ய வேண்டும். இதுதான் பா.ஜ.க.வின் வேலை”.

தென்மாநிலங்களில் வெற்றி பெறும் காங்கிரஸ் கூட்டணி வட மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஏன் வெற்றி பெற முடியவில்லை?

“காங்கிரஸினுடைய மொத்த அரசியலுமே ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய கட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது. ஆனால் பாஜக, ஆங்கிலயேர்களுக்கு அடிபணிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் எல்லாம் முகலாய படையெடுப்புகளை மையமாக வைத்து தான் அவர்களுடைய அரசியல் இருந்திருக்கிறது.  வட மாநிலங்களில் ஆங்கிலேயர்கள், இந்து - முஸ்லிம்  மக்கள் இடையே பல காலமாக விரிசலை கொண்டு வந்தார்கள். இந்து - முஸ்லிம் கலவரங்கள் நிறைய நடந்திருக்கிறது. இதனை மையப்படுத்தி தான் பா.ஜ.க.வும் ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து வருகிறது.

100 வருடத்திற்கு முன்பாக இந்து மக்களை மையப்படுத்தி தான் ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து வந்தது. அதற்கேற்றார் போல் இந்தியா- பாகிஸ்தான் பிரிகிறது. அப்பொழுது இங்கு இருக்கக்கூடிய இந்து மக்கள் அகதிகளாக அங்கு செல்கிறார்கள். அங்கு இருக்கக்கூடிய இஸ்லாமிய மக்கள் இங்கு அகதிகளாக வருகிறார்கள். இந்த அரசியல் களம் அவர்களுக்கு நல்ல களமாக அமைந்துவிட்டது.

ஆனாலும் 1947 இல் இருந்து 1967 வரை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியில் நடந்த உட்கட்சி பூசலால் அங்கிருந்த முக்கிய தலைவர்கள் அங்கிருந்து பிரிந்து புதிதாக கட்சி தொடங்கினர். அந்தக் கட்சியோடு சேர்ந்து ஜன சங்கம் என்ற கட்சியை ஆர்.எஸ்.எஸ் தொடங்கி உள்ளே நுழைந்து ஆட்சி அமைத்து எழுபதுகளில் முதல் தடவையாக பாஜக அரசியலில் வருகிறது. அரசாங்கத்தில் அவர்கள் நுழைந்தவுடன் அனைத்தையும் கண்ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை பொருத்தவரை மாநிலக் கல்வி துறைகளில் மிகப்பெரிய ஊடுறவுகள் வந்திருக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதி வந்திருக்கிறார்கள். வரலாற்றை மாற்றுவதை அவர்கள் பலகாலமாக முயற்சி செய்து வருகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, திருவள்ளுவருக்கு திடீரென்று காவி கலரை போட்டுவிட்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை, வரலாற்றை திரித்து சொல்வது தான். அவர்கள் வடமாநிலங்களில் மத துவேசத்தை நார்மல் செய்து விட்டார்கள். பாஜக காரனுக்கும் ஆர்.எஸ்.எஸ் காரணுக்கும் என்றைக்குமே அவர்களுடைய கருத்தை நேரடியாக சொல்கிற பழக்கமே கிடையாது. எடப்பாடி பழனிசாமி மூலமாகவோ, ஜெயலலிதா மூலமாகவோ தான் வருவார்கள். மற்றவர்களின் தோளில் ஏறி நான் நல்லவன் என்ற கதையைச் சொல்லிதான் வருகிறார்கள்”.

காங்கிரஸ் செய்த தவறுகளை 10 வருடத்தில் நாங்கள் சரி செய்து விட்டோம் என்று கூறுகிறார்களே? 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டிருக்கிறோம் என்றும் கூறுகிறார்களே?

“ஒரு சிலரை மட்டும் பணக்காரர்களாக்கி மொத்த ஊர்களையும் ஏழ்மையாக்கி வைத்திருக்கிறார்களே. கடந்த வருட டேட்டாவை எடுத்துப் பார்த்தால் 62% வேலையாக கொண்டாட்டம் இந்தியாவில் இருக்கிறது என்று கூறுகிறது. இதற்கு யார் காரணம்? அதானியையும், அம்பானியையும் மட்டும் பணக்காரர்களாக உருவாக்கி இந்தியா வளர்ச்சி அடைந்து விட்டது என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை”.

வளர்ச்சி.., வளர்ச்சி...,வேண்டும் மீண்டும் மோடி என்று சொல்லி பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் இந்த மாதிரியான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது?

“அவர்கள் சொல்கிற வளர்ச்சி, அதானியுனுடைய வளர்ச்சியை மட்டும்தான் அவர்கள் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி அதானி, வளர்ச்சி அம்பானி என்பதுதான் அவர்களது உண்மையான கொள்கை. விவசாயிகள் பிரச்சனையில் இருக்கிறார்கள். விவசாயிகளின் நிலைமை மிகவும் கொடுமையாக இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவில் தலை விரித்து ஆடுகிறது. சிறுகுறு தொழில்கள் ஜிஎஸ்டி வரியினால் அழிந்து போய்விட்டது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து”.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பும், பின்பும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து தி.மு.க.வையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? களம் எப்படி இருக்கிறது?

“யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதைப் போல தேர்தல் வரும் முன்னே மோடி வருவார் பின்னே என்ற கதைதான். எப்போது தேர்தல் வருமோ, அப்போது தமிழ்நாட்டுக்கு ஓடி வருவார். வந்து வாயில் வடை சுடுவார்.  அனைத்து கதையும் சொல்லிவிட்டு போய்விடுவார். சென்னை வெள்ளம் வந்த போதும் தென்மாநிலங்களில் நிகழ்ந்த வெள்ளத்தின் போதும் என்ன செய்தார்? முதலில் அவர் காது கொடுத்து கேட்டாரா?. அந்தச் சமயத்தில் நிதியமைச்சரை அனுப்புகிறார்கள். நிதியமைச்சருக்கு என்ன தெரியும், பாவம். நிர்மலா சீதாராமனை பார்த்தால் பாவமாக தெரிகிறது” என்று கூறினார்.