தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி நேற்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், நாம் தமிழர் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சீமான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். இதில் சீமான் 48,597 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார். இவருடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் 88,185 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் இரண்டாம் இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் கே.குப்பன் 50,524 வாக்குகள் பெற்றுள்ளார்.