ADVERTISEMENT

வெற்றிப்பட இயக்குநருடன் கைகோர்த்த ஹிப்ஹாப் ஆதி!

04:50 PM Oct 09, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன், ஹிப்ஹாப் ஆதி கூட்டணியில் உருவாகியுள்ள 'அன்பறிவு' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில், இந்தக் கூட்டணி ஒரு புதிய படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, மரகத நாணயம் பட இயக்குநர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கவுள்ளார். மிகப்பெரும் பட்ஜெட்டில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தின் பணிகள் ஆயுத பூஜை தினத்தன்று பூஜையுடன் தொடங்கவுள்ளன.

டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, 75 நாட்கள் பொள்ளாச்சி மற்றும் சென்னை பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்யும் திட்டத்தில் உள்ளதாம்.

இது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள அன்பறிவு படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT