கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்குநர் ராஜேஷ் மிஸ்டர் லோக்கல் படத்தை எடுத்தார். இதில் சிவாவுடன் நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். கடந்த மே மாதம் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாய் அமைந்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்நிலையில் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தான் இப்படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஹிப்ஹாப் தமிழா நடித்து வெளியான நட்பே துணை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து அவர் என்ன மாதிரியான படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது மிஸ்டர் லோக்கல் மற்றும் கோமாளி படங்களில் இசையமைத்து வந்தார். இந்நிலையில் இப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.