ADVERTISEMENT

"இந்தப் படம் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" - நடிகர் ஜி.வி. பிரகாஷ் பேச்சு!

03:45 PM Dec 18, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

அறிமுக இயக்குநர் சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘பேச்சிலர்’ திரைப்படம் கடந்த 3ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படக்குழுவினர் நேற்று (17.12.2021) பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அந்த நிகழ்வில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் பேசுகையில், "ஒரு படத்தின் வெற்றி என்பது படம் மக்களிடம் சென்று சேர்வதும், அவர்கள் அந்தப் படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதிலும்தான் இருக்கிறது. இப்படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றதில் மகிழ்ச்சி. அதற்கு டில்லி சாரும் சக்தி சாரும்தான் காரணம். ஒரு படத்திற்கு இதுதான் பட்ஜெட் என தீர்மானித்து வடிவமைத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது அவர்கள்தான். இந்தப் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்திற்குப் பிறகு பெரிய வெற்றி பெற்றுள்ளது. மூன்று வாரங்கள் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் தந்த அறிவுரைக்கும் விமர்சனங்களுக்கும் பெரிய நன்றி. நீங்கள் தரும் கருத்துகளில்தான் நாங்கள் எங்களைத் திருத்திக்கொள்கிறோம். ‘பேச்சிலர்’ பெரிய தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை அட்டகாசமாக உருவாக்கிய சதீஷ், படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT