ADVERTISEMENT

“பொய் சொல்லி என்னைக் கொல்லாதீர்கள்...”- பாடகி ஜானகி வேதனை!

09:57 AM Jun 29, 2020 | santhoshkumar

ADVERTISEMENT


இந்தியா சினிமாவில் பழம் பெரும் பாடகியாக இருப்பவர் ஜானகி. இதுவரை 17 மொழிகளில் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என்று இவர் படைத்த சாதனைகள் ஏராளம்.

ADVERTISEMENT

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சினிமாவில் இனி பாடுவதில்லை என்பதை அறிவித்துவிட்டு, ஹைதராபாத்தில் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் பாடகி ஜானகி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி நேற்று மதியம் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து ஜானகியின் மகன் மற்றும் இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது ரசிகருடன் ஜானகி போனில் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், “எல்லாருமே ஃபோன் போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை போன் தெரியுமா?. எதற்கு இந்த மாதிரி செய்தியை வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது முதல் முறையல்ல, 6 ஆவது முறை. சும்மா தேவையில்லாமல் வேண்டுமென்றே செய்து கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக இதே மாதிரி செய்தி வந்த போது வாட்ஸ்-அப்பில் பேசி அனுப்பினேன். இந்த மாதிரி வதந்திகள் எல்லாம் வேண்டாம். இந்த மாதிரி செய்தி எல்லாம் கேட்டால் சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். இந்த மாதிரி பொய் எல்லாம் சொல்லி என்னை நீங்க கொல்லாதீங்க என்று நல்லா திட்டிவிட்டேன். மறுபடியும் இப்படிச் செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT