'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது 'கர்ணன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். தனுஷ் நடிக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். முழுவீச்சில் நடைபெற்று வந்த படத்தின் பணிகள் கரோனா காரணமாகத் தடைப்பட்டது. கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்ததும் படப்பிடிப்பு நடத்துவதற்கு கிடைத்த அரசு அனுமதியைத் தொடர்ந்து, கர்ணன் படத்தின் படப்பிடிப்பைத் மீண்டும் தொடங்கியது படக்குழு. இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பானது இன்று (09.12.2020) நிறைவடைந்துள்ளது. இத்தகவலை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கர்ணன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய மாரி செல்வராஜிற்கு நன்றி. படத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய தயரிப்பாளர் தாணு அவர்களுக்கு நன்றி. உடன் நடித்த சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி. சிறப்பு வாய்ந்த இந்தப் படத்திற்குச் சிறப்பான இசையை வழங்கிய சந்தோஷ் நாராயனுக்குச் சிறப்பு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.