ADVERTISEMENT

எலோன் மஸ்கிடம் கோரிக்கை வைத்த தனுஷ் பட இயக்குநர்

06:12 PM Apr 27, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2016-ல் வெளியான 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன். பின்பு அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் உருவான 'மாஃபியா : சாப்டர் 1' படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான 'மாறன்' படத்தை இயக்கி இருந்தார். இதனிடையே பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் 'நரகாசூரன்' படத்தை இயக்குனார். இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, ஆத்மிக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2018-ல் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. பிறகு சில காரணங்களால் இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் போனது.

இந்நிலையில் கார்த்திக் நரேன் 'நரகாசூரன்' படத்தை ரிலீஸ் செய்யக்கோரி எலோன் மஸ்கிடம் கேட்டுள்ளார். உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலோன் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் சமூக வலைத்தளத்தை சொந்தமாக வாங்கியிருந்தார். அதனை கார்த்திக் நரேன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து "யோவ், எலோன் மஸ்க். நீங்க மார்ஸ்-கு போகிறதுக்கு முன்னாடி என்னுடைய 'நரகாசூரன்' படத்தை வாங்கி ரிலீஸ் செய்து விடுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும்" எனக் கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT