கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் செயல்படவுள்ள இந்த மைதானத்தின் தொடக்க விழா வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவின் தொடக்க விழா அழைப்பிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் "எனது கனவு திட்டமான நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழாவை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், சிஎஸ்கே அணியின் சிஇஓ விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் வருகிறார்கள். இவர்களோடு நடிகர் யோகிபாபுவும் கலந்து கொள்கிறார். யோகிபாபு நன்றாக கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.