தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, கடைசியாக போலா ஷங்கர் படத்தில் நடித்திருந்தார். தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்காக வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றுள்ளது. வசிஷ்டா இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகிறது. சிரஞ்சீவியின் 157வது படமாக இப்படம் உருவாகும் நிலையில் ஃபேண்டஸி ஜானரில் தயாராகிறது.
இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரை பார்க்கையில், பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் போன்ற பஞ்ச பூதங்கள் (இயற்கையின் ஐந்து கூறுகள்) நட்சத்திர வடிவத்தில், திரிசூலத்துடன் கூடிய ஒரு பொருளில் சூழப்பட்டுள்ளது.