தற்போது இவர் இன்சைட் அவுட் என்று தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இவருக்கு வயது 56. அந்த புத்தகத்தில் அவர் வாழ்வில் நடந்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
“எனக்கு 15 வயது இருக்கும். வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது என் வீட்டின் வாசலில் வயதான ஒருவர் கையில் வீட்டினுடைய சாவியை வைத்துக்கொண்டு எனக்காக காத்து கொண்டு இருந்தார். அந்த வயதானவரை பார்த்த நான், யார் நீங்கள்? எதற்காக என் வீட்டு வாசலில் அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அந்த பெரியவர் உன்னை உனது தாயார் என்னிடம் 500 டாலருக்கு விற்பனை செய்திருக்கிறார் என்று கூறினார். இதனை கேட்ட 15 வயது சிறுமியான நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அதற்குபின் அந்த நபரால் பலாத்காரம் செய்யப்பட்டேன். அந்த சம்பவத்தை அடுத்து உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் அழுத்தத்துக்கு உள்ளானேன்” என்று அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது எழுதியிருக்கும் இன்சைட் அவுட் புத்தகத்தை தன்னுடைய மூன்று மகள்களுக்கும் தன்னுடைய அம்மாக்காகவும் சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்.