ADVERTISEMENT

சமந்தா நடனமாடிய பாடலுக்கு எதிராக வழக்கு

12:02 PM Dec 13, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகை சமந்தா, ‘புஷ்பா’ படத்தில் ‘ஓ சொல்றியா..' என்ற குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்பாடலின் லிரிக்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், நடிகை சமந்தா நடனமாடிய பாடலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'புஷ்பா' படத்தின் 'ஓ சொல்றியா..' பாடல் வரிகள் ஆண்களை வக்கிர புத்தியுள்ளவர்களாக சித்தரித்திருப்பதாக கூறி ஆந்திராவைச் சேர்ந்த ஆண்கள் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT