ADVERTISEMENT

"அன்பே நீ எங்களுடன் இங்கே இருந்திருக்க விரும்புகிறேன்" - போனி கபூர் உருக்கம்!

07:14 AM Aug 14, 2020 | santhosh

ADVERTISEMENT

நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துபாயில் மரணம் அடைந்தார். ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்க சென்றபோது குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி அவர் இறந்தார். இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணத்தில் இன்னமும் மர்மம் நீடித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 13 (நேற்று) ஸ்ரீதேவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கணவர் போனிகபூர் ஸ்ரீதேவியை நினைவுகூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

ADVERTISEMENT

"அன்பே நீ எங்களை விட்டு வெளியேறிய 900 நாட்களில் ஒவ்வொரு நொடியும் உன்னை நினைத்துகொண்டே இருக்கிறேன். குஞ்சன் திரைப்படத்தில் ஜானுவின் பணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததற்கு உன் முகத்தில் மகிழ்ச்சியைக் காண இன்று ஆசைப்படுகிறேன். நீ எங்களுடன் இங்கே இருந்திருக்க விரும்புகிறேன். நீ இல்லாமல் எங்கள் மகிழ்ச்சி முழுமையடையாது. பிறந்தநாள் வாழ்த்துகள் என் வாழ்க்கையே, என் காதலே. #HappyBirthdaySridevi" என பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT