Skip to main content

“என்னை கேள்வி கேட்க நீங்க யார்?”- பிக்பாஸ் விவகாரத்தில் கோபமான லக்‌ஷ்மி மேனன்! 

Published on 28/09/2020 | Edited on 28/09/2020
lakshmi menon

 

 

கும்கி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இளம் நடிகை லக்‌ஷ்மி மேனன். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் என்று சமூகவலைதளங்களில் பலரும் வெகுவாக பேசி வந்தனர்.

 

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை பதிவிட்டிருந்தார் அவர். அதில், “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்றவர்களின் பிளேட்டுகளையும், அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளையும் நான் இப்போதல்ல, எப்போதும் சுத்தம் செய்யப்போவதில்லை. நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன் சண்டை போடவும் போவதில்லை. இதன் பிறகு, ஏதோ ஒரு கேவலமான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதாக வதந்திகளுடன் யாரும் வரமாட்டார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

 

இந்த பதிவில், பிளேட்களையும், கழிப்பறைகளையும் கழுவப்போவதில்லை என்று குறிப்பிடப்பட்டது பெரும் சர்ச்சையானது. சமூகவலைதளத்தில் பலரும் ஏன் அதெல்லாம் கேவலமான விஷயமா? என லக்‌ஷ்மி மேனனை சாடத் தொடங்கினர்.

 

இதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் லக்‌ஷ்மி மேனன். அதில், “கொஞ்ச நேரத்திற்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நான் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்த பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள். உனக்கு பிளேட்டு கழுவுவது, கழிப்பறைகளைக் கழுவுவது கேவலமா இருக்கா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். என்னை கேள்வி கேட்க நீங்க யார்? அனைத்துமே என்னுடைய விருப்பம்தான். பிக்பாஸ் நிகழ்ச்சி சிலருக்கு  பிடிக்கலாம், பிடிக்காமலும் இருக்கலாம்.

 

எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் நான் அங்கு போகவில்லை. என் வீட்டில் நான் உபயோகிக்கிற பிளேட்டுகள், கழிப்பறைகளை நான்தான் சுத்தம் செய்கிறேன். ஒரு நிகழ்ச்சிக்குப் போய் அதைச் செய்ய நான் விரும்பவில்லை. கேமரா முன்பு மற்றவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு, பிளேட்டுகள், கழிப்பறைகளைக் கழுவுவது எல்லாம் எனக்கு தேவையில்லை. என்னிடம் பிக் பாஸ் போறீங்களானு கேட்கும்போது, கஷ்டமா இருக்கு. மற்றவர்களின் விருப்பத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக லட்சுமி மேனன்

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
lakshmi menon to pair with aari arjunan in next movie

ஆரி அர்ஜுனன் ஹீரோவாக 2018ஆம் ஆண்டு வெளியான நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்திருந்தார். பின்பு உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது சமீபத்தில் சேரன் இயக்கத்தில் வெளியான ஜர்னி வெப் தொடரின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே ஹன்சிகா நடிக்கும் மேன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் புதி பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ராஜசேகர பாண்டியன் இயக்கும் இப்படத்தில் ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது முதல் படமாக இப்படத்தைத் தயாரிக்கிறது. மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. 

லட்சுமி மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். அப்படம் சரியாகப் போகவில்லை. இப்போது யோகிபாபுவின் வானவன், ஆதியின் சப்தம் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். 

Next Story

லட்சுமிமேனனுடன் திருமணமா? - விஷால் விளக்கம்

Published on 11/08/2023 | Edited on 11/08/2023

 

Marriage with Lakshmi Menon? - Explained by Vishal

 

நடிகர் விஷால், நடிகை லட்சுமிமேனன் இணைந்து பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்கள். அப்போதிலிருந்தே காதலிக்கிறார்கள், கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என அடிக்கடி செய்திகள் உறுதியற்ற நிலையில் கசிந்து வந்தது. தற்போது ஊடகங்களில் ரகசியத் திருமணமே செய்து விட்டார்கள் என செய்திகள் பரவி வந்தது. சமூகவலைத்தளங்களிலும் ரசிகர்கள் இது குறித்து பேசி வருகிறார்கள்.

 

இந்த நிலையில் இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்தப் பதிவில் விஷால் கூறியிருப்பதாவது:“பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகளுக்கோ அல்லது வதந்திகளுக்கோ நான் பதிலளிப்பதில்லை. அப்படிச் செய்வது பயனற்றது என்று நான் நினைக்கிறேன். ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடன் எனக்கு திருமணம் என்கிற ரீதியில் வதந்தி பரவி வருவதால், நான் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது. என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து மற்றும் அவருடைய இமேஜைக் கெடுக்கிறீர்கள்.ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரைத் திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.