விமானம் மூலம் சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பவதாரிணியின் உடல், தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பவதாரிணியின் உடல், நேற்று இரவு சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் பவதாரிணி உடலுக்கு பாரதிராஜா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேனி தொகுதி நாடளுமன்ற உறுப்பினர் ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் இறுதிச் சடங்கில் பவதாரணி பாடிய ‘மயில் போல பொண்னு ஒண்ணு...’ பாடலை அவரது குடும்பத்தினர் பாடி நிறைவு செய்தனர். இந்த நிலையில் பவதாரணியின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு முடிந்ததும் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேனியின் லோயர் கேபம்ப்பில் உள்ள இளையாராஜாவின் சொந்த வீட்டில், அவரின் தாயார் சின்னதாய் மனைவி ஜீவா ஆகியோரின் மணிமண்டபம் இருக்கும் நிலையில் அங்கே பவதாரணியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.