chennai high court has given a new verdict ilaiyaraaja song copyright case

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாககூறி கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஃகோ, அஹி, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்டஇசைநிறுவனங்கள் பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டிருந்தார். இதனைஎதிர்த்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதிஅளித்த தீர்ப்பால் தான் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், என்னிடம்காப்புரிமை பெறாமல் தன்னுடைய பாடல்களைபயன்படுத்தி வருகிறார்கள். இப்பாடலை படத்தில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், இதர இணையதளங்களில், பயன்படுத்துவது தவறு என்றும், இது எனக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாகவும் இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. இதைகேட்ட நீதிபதி இளையராஜாவின் பாடல்களைபயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் எஃகோ, அஹி, யுனிசிஸ், கிரி டிரேடிங் ஆகிய இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டுவழக்கை மார்ச் 21 ஆம்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Advertisment