அப்போது பேசிய இயக்குனர் பாரதிராஜா, “அடவி என்பது அடர்ந்த வனம் என்பது எனக்கே தெரியவில்லை. தூய தமிழ்ச் சொல். காடுகளை நேசிக்கும் மனிதனால் மட்டுமே இப்படி ஒரு படத்தை இயக்க முடியும். அதுவும் குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் படத்தின் காட்சிகளைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை, மிகவும் நிறைவாக இருக்கிறது” என்று கூறினார்.
மேலும் பேசுகையில், “அடவி போன்ற சிறிய படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சூப்பர் ஸ்டார் நடித்த பெரிய படங்களை வெளியிடாதீர்கள். அந்தப் படங்கள் எப்போது வெளிவந்தாலும் நன்றாக ஓடும். அந்த நாட்களில் சிறிய படங்களை வெளியிட்டால் தான் கவனம் பெறும். அப்பொழுது தான் மக்கள் மனதில் சரியாக போய்ச் சேரும் என்பது எனது கருத்து. அதற்காக தான் நான் போராடிக்கொண்டிருக்கின்றேன். இதை தயாரிப்பாளர் சங்கத்திலும் கூறியிருக்கிறேன்” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.