Skip to main content

“எனக்கும் இளையராஜாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால்...”- பாரதிராஜா உருக்கம்

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தமிழரசன்'. இந்தப் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் இளையராஜா அவருக்கு எவ்வளவு முக்கியமானவராக செயல்பட்டார் என்பது குறித்து பேசினார்.
 

barathiraja

 

 

அதில், “இளையராஜாவுடன் முரண்பாடு ஏற்பட்டு, நிறைய இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துவிட்டேன். இன்றளவும் இனியும் அவரை மிஞ்சி ஒரு இசைக் கலைஞன் பிறந்து வருவது கஷ்டம். பாடல்கள் கூட பாடிவிடலாம். ஆனால், பின்னணி இசை என்பது ஒரு படத்துக்கு உயிர் நாடி. என்னுடைய படங்கள் பேசுகிறது என்றால், அது இளையராஜாவின் இசையால் மட்டுமே பேசும். எந்த இடத்தில் எந்த இசை இருக்க வேண்டும், எந்த அளவுக்குச் சப்தம் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கிற ஒரே ஆள் அவர்.

படத்தில் ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தால் கூட பின்னணி இசையின் மூலம் உயிர் வர வைத்துவிடுவார். அவர் தமிழகத்துக்குக் கிடைத்தது மிகப்பெரிய விஷயம். எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவருக்கு இணையான இசைக் கலைஞனைக் கண்டுபிடிப்பது கஷ்டம்” என்றார்.

இதே நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், இயக்குநர் பாரதிராஜா, ராதாரவி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மோடியே முன்வந்து இளையராஜாவை நியமித்திருக்கிறார்... அதனால் தமிழ்நாட்டில்..." - கவிஞர் முத்துலிங்கம்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

muthulingam speech at sivaji ganesan book release function

 

நடிகர் சிவாஜி கணேசன் குறித்து மருது மோகன் என்பவர் 'சிவாஜி கணேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(18.12.2022) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா  'சிவாஜி கணேசன்' புத்தகத்தை வெளியிட, சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

 

நிகழ்ச்சியில் பேசிய முத்துலிங்கம், "ஒரு நடிகரைப் பற்றி இவ்வளவு ஆய்வு செய்து 1600 பக்கங்களில் ஒரு புத்தகத்தை எழுதியவர் இந்தியத் துணைக் கண்டத்தில் உலக வரலாற்றில் எவரும் கிடையாது மருது மோகன் மட்டும்தான்.  இந்த விழாவிற்கு இளையராஜாவை அழைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார் மருது மோகன். அதற்காக மூன்று மாதம் காத்திருந்து இளையராஜாவிடம் தேதியைப் பெற்றிருக்கிறார். 

 

சிவாஜி பற்றி எல்லாருக்கும் தெரியும். தமிழ் சிறந்த மொழி என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டும் என்றால் சிவாஜி படத்தைத் திரையிட்டுக் காண்பித்தால் போதும். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்குக் கிடைத்த பெருமை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. மத்திய அரசே, அதாவது மோடியே முன்வந்து மாநிலங்களவை உறுப்பினராகச் சேர்த்திருக்கிறார். இதை விட வேறு என்ன சிறப்பு வேண்டும். இதற்காகவே மோடி அவர்களை நான் பாராட்டுகிறேன். மத்திய அரசையும் போற்றுகிறேன். 

 

அதே நேரத்தில் மொழிக் கொள்கை என்று வரும்போது, என்னதான் செய்தாலும் திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்றிருக்கிற காலம் வரையிலும் தாமரை கட்சி தமிழ்நாட்டில் தலை நிமிர முடியாது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டத்தை வழங்கியவர் கலைஞர்தான்." என்றார். மேலும் தொடர்ந்து இளையராஜாவைப் பற்றிப் புகழ்ந்து தள்ளினார் கவிஞர் முத்துலிங்கம். 

 

 

Next Story

23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் எவர்க்ரீன் கூட்டணி

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

after 23 years ilaiyaraja composing music for ramarajan movie samaniyan

 

80களில் 'எங்க ஊரு காவல்காரன்', 'கரகாட்டக்காரன்', 'தங்கமான ராசா' என பல ஹிட் படங்களைக் கொடுத்து டாப் ஹீரோவாக வலம் வந்தவர் ராமராஜன். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய ராமராஜன் தற்போது 'சாமானியன்' படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தை ராகேஷ் இயக்க ராதாரவி மற்றும் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மதியழகன் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 

 

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இது தொடர்பாக இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளது படக்குழு. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

இவர்கள் கூட்டணியில் வெளியான 'செண்பகமே...செண்பகமே', 'சொர்கமே என்றாலும்...', 'மதுர மரிக்கொழுந்து...' உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் உள்ளது. அதிலும் சில பாடல்கள் ராமராஜன் குரலுக்கு இளையராஜாவின் குரல் அப்படியே பொருந்தியிருக்கும். இப்படி நீங்கா நினைவுகளாகப் பல பாடல்களைத் தந்த இந்த எவர் க்ரீன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.