இப்படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அதில் அருண் விஜய் சேரும் சகதியுமாக ஒரு கையில் பெரியார் சிலையுடனும் மறு கையில் பிள்ளையார் சிலையுடனும் இடம்பெற்றிருந்தார். அந்த போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து இந்த கடந்த டிசம்பர் மாதம், டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரில் வசனம் எதுவும் இடம் பெறவில்லை. வழக்கமான பாலா படம் போல் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டுள்ளது போல் தெரிகிறது. கதாநாயாகியான ரோஷினி பிரகாஷ், பல்வேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார். டீசரின் ஹைலைட்டாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருண் விஜய் வைத்திருக்கும் பெரியார், பிள்ளையார் சிலை தொடர்பான காட்சி அமைந்துள்ளது. டீசரின் இறுதியில் ஜெயிலில் இருக்கும் அருண் விஜய், கோபப்பட்டு கத்தும்போது சிங்கம் கர்ஜிக்கும் சத்தத்தை வைத்து படக்குழு காட்சிபடுத்தியுள்ளது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.