ADVERTISEMENT

”என் வாழ்க்கையில் இந்த மாதிரி பண்ணியதே கிடையாது” - அதர்வா பேச்சு 

06:13 PM Jul 28, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் அதர்வா பேசுகையில், “படத்தின் தயாரிப்பாளர் முருகானந்தத்திற்கு நன்றி. படத்திற்கு என்ன தேவையோ அதை பண்ணிக்கொடுத்தார். அவர் எடுக்கும் எல்லா படங்களும் வெற்றிப்படமாக அமைய வேண்டும். ட்ரைலர் பார்க்கும்போது நான் அதிகம் மெனக்கெடல் எடுத்து நடித்ததுபோல இருக்கும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அந்த செட்டில் இருந்த எல்லோருமே கடினமாக உழைத்தார்கள். வெறும் ஆக்‌ஷன் படமாக இல்லாமல் நிறைய எமோஷன்ஸ் உள்ள படமாக குருதி ஆட்டம் இருக்கும்.

8 தோட்டாக்கள் படம் பார்த்த உடனேயே ஸ்ரீ கணேசுடன் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். குருதி ஆட்டம் கதை கேட்ட உடனேயே பிடித்துவிட்டது. படத்தில் வரும் எல்லா கதாபாத்திரமுமே ரொம்பவும் இன்ட்ரஸ்டிங்காக இருக்கும். இந்தப் படத்திற்கு யார் இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தபோது யுவன் தான் நினைவுக்கு வந்தார். படத்திற்கு சிறப்பான இசையைக் கொடுத்த யுவனுக்கு நன்றி.

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் எல்லா விஷயங்களையும் செட்டில் பார்த்து பார்த்து அவரே செய்வார். நான் சில ஆக்‌ஷன் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் வரும் ஆக்‌ஷன் சீக்குவன்ஸ் மாதிரி என் வாழ்க்கையிலேயே பண்ணியது கிடையாது. அனைவருக்கும் பிடிக்கக்கூடிய படமாக குருதி ஆட்டம் இருக்கும். எல்லோரும் திரையரங்கில் வந்து பாருங்கள்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT