Skip to main content

வெளியாகிறது ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு 

Published on 14/06/2018 | Edited on 15/06/2018
ar rahman


1992ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா' படம் மூலம் இந்திய திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் 'இசைபுயல்' ஏ.ஆர். ரஹ்மான். பின்னர் தென்னிந்திய மொழிகள் மட்டுமில்லாமல் 'ஹிந்தி' மற்றும் 'ஹாலிவுட்' வரை வெற்றிக்கொடி நாட்டினார். 'ஸ்லம் டாக் மில்லியனைர்' என்ற ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்தற்காக 2 'ஆஸ்கர்' விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் நிலைநாட்டினார். இதுமட்டுமில்லாமல் இசைத்துறை ஜாம்பவான்களுக்கு வழங்கப்படும் 'கிராமி' விருதினை இரண்டு முறையும் மற்றும் 'கோல்டன் குளோப்' விருதினையும் பெற்றுள்ளார். மேலும் பல தேசிய விருதுகளும் மாற்று ஆறு முறை டாக்டர் பட்டமும் பெற்ற இவரின் சாதனைகளை பெருமை படுத்தும் விதமாக  ஏ.ஆர். ரஹ்மான் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. பென்குயின் பதிப்பகத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்துக்கு 'நோட்ஸ் ஆப் எ டிரீம்' என பெயரிடப்பட்டுள்ளது. இவர் விளம்பரப் படத்துக்கு இசையமைக்க ஆரம்பித்தது முதல் ஆஸ்கர் விருது பெற்றது வரை, மற்றும் இசையுலகப் பயணத்தில் ரஹ்மான் கடந்துவந்த பாதை மற்றும் அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் இந்த புத்தகத்தில் பதிவாகியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

'நடிகர்கள் பாடுவதற்கு முறையான பயிற்சி அவசியம்' - ஏ.ஆர் ரஹ்மான் அட்வைஸ் 

Published on 23/01/2019 | Edited on 23/01/2019
ar rahman

 

 

சர்கார் படத்திற்கு பிறகு விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் நடுவராக ஒரு சர்வதேச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர்கள் சொந்த குரலில் பாடுவது குறித்து பேசியபோது.... "திரைப்படங்களில் தங்களுக்கான பாடல்களை நடிகர்களே பாடுவது உலகம் முழுக்கவே பொதுவாக நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்காக பாடும் பாடலைப் பதிவு செய்யும் முன் அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். அதற்காக அவர்கள் போதுமான நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நாட்களில் நடிகர்கள் மிகவும் பரபரப்பாக பிசியாக இருக்கிறார்கள். ஒப்பந்தமான பொறுப்புகளையே ஏமாற்றி தப்பிக்கும் நிலையில் இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு தங்கள் பாடல்களைப் பாடுவதற்கு பயிற்சியெடுக்க நேரம் இல்லாத ஒரு இக்கட்டான சூழல்தான் அவர்களுக்கு உள்ளது. ஒருவேளை பயிற்சிக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க முடியும் என்று அதில் ஈடுபட்டால் அவர்களது படத்தில் அவர்களே பாடுவது என்பது மிகமிக அற்புதமான ஒரு யோசனையாக இருக்கும்‘’. இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்.