ADVERTISEMENT

'புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லுவது என்னவென்றால்...' - அஞ்சலி 

04:13 PM Mar 30, 2019 | santhosh

அஞ்சலி நடிப்பில் அடுத்ததாக நாடோடிகள் 2, லிசா, சிந்துபாத் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தன்னை சுற்றி வரும் வதந்திகள் குறித்து நடிகை அஞ்சலி பேசியபோது...

ADVERTISEMENT

ADVERTISEMENT

"நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தகவல்கள் பரவி உள்ளன. அதில் சிறிதும் உண்மை இல்லை. திருமண செய்தியே பொய். அப்படி திருமணம் செய்துகொண்டாலும் சினிமாவை ஏன் விட வேண்டும். கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும். நான் மற்றவர்களை நோகடிப்பதாக பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை. இதுவரை யாரையும் நோகடித்தது இல்லை. என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது கண்டு கொள்வது இல்லை" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT