'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களுக்கு பிறகு இயக்குநர் அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்து உருவாகியுள்ள படம் 'சிந்துபாத்' . இந்த படத்தில் அஞ்சலி, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

vijay sethupathi

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Advertisment

இந்த படத்தை வாசன் மூவிஸ் மற்றும் கே புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாித்துள்ளன. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய் சேதுபதி, ''அருண்கிட்ட இருக்க பிளஸ் முன்னணி கதாப்பாத்திரங்களை நல்லவிதமாக காட்டுவார். பெண்களை நல்ல விதமாக காட்டுவார். படம் என்பதையும் காட்டி என் குடும்ப நண்பனாகவும் ஆகிட்டான். அதனால் தான் என் பையன இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

சிந்துபாத் படம் நமக்கு முன்னாடியே தெரிஞ்ச கதை தான். அதை சொன்னா செய்தி ஆக்கி பிரச்சனை பண்ணுவாங்க. பெயர் சொல்லல. கடல் கடந்து தன் மனைவியை கடத்தி சென்று போனவனிடம் இருந்து. இவன் போய் மனைவியை மீண்டும் எப்படி கஷ்டப்பட்டு போராடி காப்பாத்துவான்கிறது தான் கதை''என்றார்.

Advertisment