ADVERTISEMENT

‘கடப்பாரையை எடுத்துவந்து அந்த கல்வெட்டை உடைப்பேன்’ - ஆனந்த் ராஜ் ஆவேசம்...

09:43 AM Jun 25, 2019 | santhoshkumar

2019-2022ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. பல்வேறு தடைகளுக்குபின் திடீரென சொன்ன தேதியிலேயே மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் இத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. அப்போது தேர்தலில் வாக்களித்தபின் நடிகர் ஆனந்த் ராஜ் பத்திரிகையாளர்களிடம் பேசியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

“இது எங்கள் குடும்பத்துக்குள் நடக்கும் சின்ன தேர்தல். 3 ஆண்டுகளுக்கு இந்தக் குடும்பத்தை நடத்துவது யார் என்பதற்கான தேர்தல். இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சி. எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி நடிகர் சங்கக் கட்டிடப் பணியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது என் விருப்பம். தேர்தல் முடிவு வெளியானபிறகும் கட்டிடப் பணி நடக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

ஒரு முக்கியமான கருத்தை நான் பல நடிகர்களிடம் பேசினேன். இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிக்கும்போது, எப்படி இருந்தாலும் கல்வெட்டு என்று ஒன்று வரும். யார் காலத்தில் கட்டப்பட்டது, யாரால் திறக்கப்பட்டது என ஒரு அடையாளம் இருக்கும். அந்த அடையாளம், ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்று மட்டுமே இருக்க வேண்டும் என்பது நான் உள்ளிட்ட பல நடிகர்களின் விருப்பம்.

அதில், ‘என்னால் திறக்கப்பட்டது’, ‘உன்னால் திறக்கப்பட்டது’ என்று இருந்தால், நானே என் கையால் கடப்பாரை எடுத்துவந்து அந்தக் கல்வெட்டை உடைக்க வேண்டிய நிலை வரும். அப்படி ஒரு நிலை உருவாகாது என்று நம்புகிறேன். இது தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடமாகவே இருக்க வேண்டும். இதிலுள்ள ஒவ்வொரு கல்லுக்கும் ஒருவர் பொறுப்பேற்றுள்ளனர். ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT