ADVERTISEMENT

பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அட்லீ

06:03 PM Jan 22, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

'ராஜாராணி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். 'பிகில்' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். இது பாலிவுட் திரையுலகில் அட்லீயின் அறிமுகப் படமாகும். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படம் பேன் இந்தியா படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இயக்குநர் அட்லீ கூறிய கதை அல்லு அர்ஜுனுக்கு பிடித்து போக, உடனே ஓகே சொல்லிவிட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT