ADVERTISEMENT

ஏ.ஆர்.ஆர் ஃபிலிம் சிட்டியில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

03:23 PM Jan 18, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வசந்த் ரவி மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வெப்பன்'. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை இயக்குநர் சென்னியப்பன் இயக்குகிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஐயர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர் ஃபிலிம் சிட்டி உள்ளது. இங்கு 'வெப்பன்' படம் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை படப்பிடிப்பின் போது லைட்மேனாக பணிபுரியும் குமார் என்பவர் சுமார் 40 அடி உயரத்தில் மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

மருத்துவமனையில் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவருக்கு வயது 47. இதையடுத்து அவரது உடல் உடற்கூராய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT