ADVERTISEMENT

கடைசி பந்தில் சிக்ஸ் -  சையத் முஷ்டாக் அலி டிராஃபியை வென்றது தமிழ்நாடு!

03:14 PM Nov 22, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2021 - 2022ஆம் ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டிராஃபியின் (இருபது ஓவர்) இறுதிப் போட்டி இன்று (22.11.2021) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கர்நாடகா 151 ரன்கள் எடுத்தது.

இதனைத்தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி, அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தாலும் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தது. இந்தநிலையில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி ஓவரின் முதல் பந்து, தமிழ்நாடு வீரர் சாய் கிஷோரின் பேட்டில் எட்ஜ் ஆகிய பவுண்டரிக்குச் சென்றது. இதன்பின்னர் சிங்கிள்களும் வொய்டும் வரவே கடைசி பந்தில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. இதனால் பரபரப்பு எகிறிய நிலையில், தமிழ்நாடு வீரர் ஷாருக்கான் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம் தமிழ்நாடு அணி, சையத் முஷ்டாக் அலி டிராஃபியை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று அசத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT