ADVERTISEMENT

என்னால் கடந்த இந்தியா டெஸ்ட் தொடரின் முடிவை மாற்றியிருக்க முடியும் - ஸ்டீவ் ஸ்மித்.

02:57 PM Dec 10, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

இந்திய அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

ADVERTISEMENT

இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்மித், தன்னால் கடந்த 2018-19 ஆம் ஆண்டு நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை ஒருவேளை தன்னால் மாற்றிருக்க முடியும் என கூறியுள்ளார். அந்த டெஸ்ட் தொடரை, இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது. அப்போது, பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஸ்மித் மற்றும் வார்னருக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித், நான் கடந்த இந்தியா- ஆஸ்திரேலியா தொடரை பாதிப்பாதியாக பார்த்தேன். அந்த தொடரில் களம் இறங்கி, அத்தொடரின் முடிவை மாற்றாமல் வெளியில் அமர்ந்து பார்க்க மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் ஒருவேளை என்னால் அந்தத் தொடரின் முடிவை மாற்றியிருக்க முடியும் என எனக்குத் தெரியும். இருந்தாலும், இப்போது ஒரு அட்டகாசமான தொடர் வருகிறது. நாங்கள் நன்றாக ஆடி வருகிறோம். இந்திய அபாயகரமான ஒரு அணி. நம்பமுடியாத அளவிற்கு சிறந்த பேட்ஸ்மேன்களையும், சிறந்த பந்து வீச்சாளர்களையும் கொண்டுள்ளது. நாங்களும் சிறந்த பந்துவீச்சை கொண்டுள்ளோம்" என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT