rohit sharma

Advertisment

இந்தியஒருநாள்மற்றும் டி20 அணியின்தொடக்கஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித்சர்மாஐ.பி.எல். தொடரின்போது காயமடைந்தார். அதன்பிறகு சிலபோட்டிகளில் விளையாடதரோகித்சர்மா, ப்ளே-ஆப்ஸ் மற்றும் இறுதிப்போட்டியில் விளையாடினார்.

இருப்பினும் காயம்முழுமையாக குணமடையாததால்ரோகித்சர்மா, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில்இடம்பெறவில்லை. ஆனால், முழு உடல்தகுதியை விரைவில் எட்டினால், ரோகித் சர்மா டெஸ்ட்தொடரில்ஆடுவார்எனஇந்திய அணி நிர்வாகம் அறிவித்தது.இதனைத்தொடர்ந்து, ரோகித் சர்மா, முழு உடல்தகுதியினை எட்டுவதற்காகதேசிய கிரிக்கெட்அகடாமியில் பயிற்சி பெற்றுவந்தார். மேலும் அவர், வருங்காலத்தில் காயங்கள் மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படாமல் இருக்க உடலை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவந்தார்.

இந்தநிலையில், ரோகித் சர்மாவுக்கு இன்று உடல் தகுதி சோதனை இன்று நடைபெற்றது. அச்சோதனையில் ரோகித் சர்மா, தனது முழு உடல் தகுதியை நிருபித்துள்ளார். இதனைத்தொடர்ந்து,ரோகித்சர்மாஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட்தொடரில்பங்கேற்பது உறுதியாகிவுள்ளது. மேலும், நாளையே ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவிற்கு புறப்படுவார்எனஎதிர்பார்க்கப்படுகிறது.