ADVERTISEMENT
ADVERTISEMENT
வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி 20 உலகக்கோப்பை தொடரில் நேரடியாக பங்கேற்கும் தகுதியை இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இழந்துள்ளன. பொதுவாக ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே நேரடியாக உலக கோப்பை விளையாட தகுதி பெரும். இந்த வருடத்திற்கான தர வரிசை பட்டியலில் இந்த இரு அணிகளும் ஒன்பது மற்றும் பத்தாவது இடத்தில உள்ளன. எனவே உலககோப்பைக்கு முந்தைய தகுதி சுற்றில் விளையாடி வென்றால் மட்டுமே உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் பங்கேற்க முடியும். இது அந்த அணிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. வரும் உலக கோப்பையில் பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டுமே நேரடியாகப் பங்கேற்கின்றன.
Show comments