ADVERTISEMENT

ஓய்வை அறிவித்தார் ராபின் உத்தப்பா

10:46 AM Sep 15, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ராபின் உத்தப்பா, அனைத்து வகையான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது 36 வயதாகும் ராபின் உத்தப்பா, கடந்த 2004- ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பை போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 2006- ஆம் ஆண்டு சீனியர் அணியில் இடம் பிடித்த அவர், இந்திய அணிக்காக 46 ஒருநாள் போட்டிகள், 13 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2007- ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ஒரு அங்கமாக அவர் விளங்கியிருக்கிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT