'Elbow Guard'பற்றி சச்சினுக்கு ஆலோசனை வழங்கிய சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியர் குரு பிரசாத் என்பவர் கண்டுபிடிக்கப்பட்டார். இவர் சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ஆவர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில் "எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் குரு பிரசாத் கண்டுபிடிக்கப்பட்டார்.

india cricket team former player sachin tendulkar search person identified in chennai

Advertisment

இதனிடையே தனியார் தொலைக்காட்சிக்கு குரு பிரசாத் அளித்த பேட்டியில், "2001- ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியின் போது சச்சினுக்கு ஆலோசனை கூறினேன். சச்சினுக்கு ஆலோசனை கூறியது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம், சச்சினுக்கு நான் ஆலோசனை வழங்கியதாக கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால் கூறாமல் இருந்தேன். சச்சின் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்பதே எனது ஆசை" என்று கூறினார்.