ADVERTISEMENT

விளையாட வாய்ப்பு கிடைக்காதது குறித்து ரஹானே பேச்சு!

01:00 PM Nov 03, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லி அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தது என டெல்லி அணி வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான ரஹானே நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றி மூலம் டெல்லி அணி தன்னுடைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. டெல்லி அணி வீரர் ரஹானே 46 பந்துகளில் 60 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார். இந்நிலையில், டெல்லி அணியின் வெற்றி குறித்தும், முந்தைய போட்டிகளில் விளையாட தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்தும் ரஹானே மனம் திறந்துள்ளார்.

அதில் அவர், "ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காதபோது மிகுந்த ஏமாற்றமடைந்தேன். அணியின் வெற்றிக்கு பங்களித்த பின் தற்போது சிறப்பாக உணர்கிறேன். நான் மூன்றாவது இடத்தில் களமிறங்கப் போகிறேன் என ரிக்கி பாண்டிங் கூறினார். அந்த இடத்தில் விளையாட நல்ல வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தேன். நெருக்கடியான நேரத்தில் அணிக்கு பங்களிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அதன்மூலம் அணி வெற்றி பெறும்போது அது கூடுதல் மகிழ்ச்சியைத் தரும்" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT