ADVERTISEMENT

பேட்மிண்டனில் பி.வி. சிந்து காலிறுதிக்கு தகுதி!

09:19 AM Jul 29, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க் வீராங்கனை மியா பிளிக்ஃபெல்ட்டை 2 - 0 என்ற கேம் கணக்கில் வீழத்தினார். 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் மியாவை வீழ்த்தி பி.வி. சிந்து அபார வெற்றிபெற்றார்.

ஒலிம்பிக் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT