ADVERTISEMENT

பும்ராவை நினைத்து கவலைகொள்கிறேன் - ஆஸி. ஜாம்பவன் ஆலன் பார்டர் ஓப்பன் டாக்! 

07:02 PM Dec 16, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், நாளை தொடங்குகிறது. இரு அணிகளும் நாளை பகலிரவு ஆட்டத்தில் மோதவுள்ளனர்.

இந்தநிலையில், ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ஆலன் பார்டர் இந்தத் தொடர் குறித்து ஒரு பேட்டியில் பேசுகையில், பும்ராவை பற்றி பயம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "நான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன். நான் அவர் குறித்து கவலைப்படுகிறேன், ஏனென்றால் எங்கள் பிட்ச்களில் கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும். மேலும், பந்து பக்கவாட்டில் மூவ் ஆகும். கடந்த முறை அவர், சிறப்பாக ஆடி முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தால், இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாய் அவர் இருப்பார்" எனக் கூறியுள்ளார்.


மேலும், "பும்ரா முகத்தில் எப்போதும் சிரிப்பு இருக்கும். ஆனால், பந்துவீச்சு ரிதத்தைப் பெற்றுவிட்டால் மிகவும் ஆபத்தானவராக மாறிவிடுவார்" என ஆலன் பார்டர் கூறியுள்ளார்.

கடந்த இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், 4 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து, இந்தியா அணி தொடரை வெல்ல முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT