ADVERTISEMENT

"நல்ல திறமைசாலி" இந்திய இளம் வீரரைப் புகழ்ந்த வில்லியம்சன்!

01:12 PM Nov 09, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய இப்போட்டியில், ஹைதராபாத் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது.

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 19 வயதே நிரம்பிய இளம் வீரரான பிரியம் கார்க், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், ஹைதராபாத் அணியின் அதிரடி வீரரும், நியூசிலாந்து அணியின் கேப்டனுமான வில்லியம்சனின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

போட்டியின் முடிவில் பிரியம் கார்க் குறித்துப் பேசிய வில்லியம்சன், "பிரியம் கார்க்கிடம் நல்ல திறமை உள்ளது. இந்தத் தொடர் முழுவதும் அவருக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தது. வலைப்பயிற்சியில் ஈடுபடும்போது, அவர் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார் என்பதை பார்க்கமுடிந்தது. சில அற்புதமான ஷாட்கள் விளையாடுகிறார். எதிர்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக இருப்பார் என்பது உறுதி" எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT