Skip to main content

பறிபோன கேன் வில்லியம்சனின் கேப்டன் பதவி... வார்னரின் வருகையால் மாற்றம் செய்த சன் ரைசர்ஸ் அணி...

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

2020 ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மும்பையில் மார்ச் 29-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

david warner appointed as hyderabad sunrisers team captain

 

 

2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய வார்னருக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்தது. இதனால் அவர் 2018 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதனையடுத்து ஹைதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார்.

அதன்பின் 2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் பங்கேற்றாலும் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று ஐபிஎல் தொடர்களில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்துவந்த வார்னர் தற்போது மீண்டும் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

 

 

Next Story

கேன் வில்லியம்சன் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கம்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

Kane Williamson step down as Test captain

 

நியூசிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் நீக்கப்படுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து நியூசிலாந்து அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலகுகிறார் என்றும் அவருக்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி கேப்டனாகப் பொறுப்பேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், வில்லியம்சன் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாகச் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து வில்லியம்சன் கூறியதாவது, “நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்தது நம்பமுடியாத சிறப்பு மரியாதை. என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் உச்சம். அதில் அணியை வழிநடத்தும் சவால்களை நான் அனுபவித்தேன். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதிகப் பணிகளைக் கொண்டது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் இந்த முடிவிற்கு இதுதான் சரியான நேரம் என நான் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

நியூசிலாந்து அணியின் கேப்டனாக 40 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்திய வில்லியம்சன் 22 போட்டிகளில் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். அவரது 24 டெஸ்ட் சதங்களில் 11 சதங்கள் அவர் கேப்டனாக இருந்தபோது அடித்தவை.  

 

நியூசிலாந்து அணி அடுத்து பாகிஸ்தான் உடன் விளையாட உள்ள தொடருக்கு டிம் சௌதி தலைமைத் தாங்குவார் எனவும், துணைக் கேப்டனாக டாம் லாதம் செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் வீரராக அணியில் தொடர்ந்து செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடர்: காயமில்லை ஆனாலும் விலகிய வில்லியம்சன் - காரணம் என்ன?

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

williamson

 

2021ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டி நடந்து முடிந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நாளை (17.11.2021) தொடங்குகிறது. முதலில் 3 இருபது ஓவர் போட்டிகளில் சந்திக்கும் இரு அணிகளும், அதனைத்தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன.

 

இந்தநிலையில், இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராவதற்காக அவர் இந்த முடிவினை எடுத்துள்ளார். இதனையடுத்து அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி, இருபது ஓவர் தொடரில் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் இருபது ஓவர் போட்டி, நாளை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.