ADVERTISEMENT

ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய முன்னணி வீரர்!

10:23 AM Oct 13, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லி அணியின் முன்னணி பந்துவீச்சாளரான இஷாந்த் ஷர்மா காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸில் இஷாந்த் ஷர்மா விளையாடி வருகிறார். பயிற்சியின் போது பந்து வீசுகையில், அவருக்கு இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன்பின் நடந்த மருத்துவப் பரிசோதனையில் காயத்தின் தன்மை தீவிரமாக இருந்ததால், நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனை டெல்லி அணி நிர்வாகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. டெல்லி அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் சில தினங்களுக்கு முன்னர் காயமடைந்து ஒருவார கால ஓய்வில் இருந்து வருகிறார்.

டெல்லி அணியின் மற்றொரு முக்கிய வீரரான அமித் மிஸ்ரா-வும் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT